ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சோள அடை

தேவையான பொருட்கள்:

  • நாட்டு சோளம் – 1 கப்
  • உளுத்தம்பருப்பு  – கால் கப்
  • துவரம் பருப்பு – ½ கப்
  • கடலைப்பருப்பு – ½  கப்
  • காய்ந்த மிளகாய் – 10
  • சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – ½ கப்
  • இஞ்சி – 1” துண்டு
  • பெருங்காயம் – 1 டீஸ்பூன் 
  • மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) – 3 டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்    
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
  1. சோளம், உளுத்தம்பருப்பு சேர்த்துக்  கழுவி, களைந்து நான்கு மணி நேரம் தன்ணீரில் ஊற வைக்கவும். 
  2. அதே போல், மற்ற பருப்புகளையும் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். 
  3. பிறகு சோளம், உளுந்தை காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 
  4. ஊற வைத்த பருப்புகளை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 
  5. இரண்டு மாவுக்கலவையையும் ஒன்றாகச் சேர்த்து, மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, கெட்டியான இட்லி மாவுப் பதத்திற்கு கலக்கவும்.
  6. அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, இரு புறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். 

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மசாலா இட்லி

தேவையான பொருட்கள்:
  • இட்லி – 5
  • பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
  • தக்காளி (பொடியாக நறுக்கியது)   – 1
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
  • நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
  1. முதலில் இட்லியை சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். 
  2. ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். 
  3. பிறகு வெங்காயம் சேர்த்து, நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும். 
  4. தக்காளி சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். 
  5. பின் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து மசாலா திக்காகும் வரை கிளறவும். 
  6. இத்துடன் இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள சட்னி எதுவும் தேவையில்லை.

குறிப்பு: இட்லியில் உப்பு இருப்பதால் கவனமாக உப்பு சேர்க்க வேண்டும். 

சனி, 2 ஏப்ரல், 2016

ராகி ப்ளேக்ஸ் கீர் | ராகி அவல் பாயசம்

தேவையான பொருட்கள்:
  • ராகி ப்ளேக்ஸ் அரை கப்
  • பால் 2 கப்
  • நெய் 2 டீஸ்பூன்
  • துருவிய தேங்காய் 3 டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை ½ கப்
  • ஏலக்காய்2  
  • முந்திரி, பாதாம் – தேவையான அளவு

செய்முறை:
  1. முதலில் தேங்காய் துருவல், ஏலக்காய் ஆகியவற்றை கால் கப் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். 
  2. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, ராகி ப்ளேக்ஸ் சேர்த்து வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்
  3. இத்துடன் கொதிக்க வைத்த பால் சேர்த்து ராகி ப்ளேக்சை வேக விடவும். 
  4. ராகி ப்ளேக்ஸ்  வெந்தவுடன் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து வைத்த நட்ஸை கலந்து, அலங்கரித்து பரிமாறவும்.