ஞாயிறு, 21 ஜூன், 2015

ராகி புட்டு| கேழ்வரகு புட்டு

ராகி புட்டு| கேழ்வரகு புட்டு
தேவையான பொருட்கள்:
  • ராகி மாவு – 1 கப்
  • உப்பு – சிறிதளவு
  • நெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • துருவிய தேங்காய் – ½ கப்
  • சர்க்கரை – ½ கப்
  • ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்


செய்முறை:
  1. முதலில் ராகி மாவை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். 
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும்.
  3. ஒரு அகலமான பேசினில் சூடான ராகி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 
  4. இத்துடன் கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு மாவை பிசிறவும். 
  5. இந்த மாவை ஆவியில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
  6. வேக வைத்த ராகி மாவுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.