சனி, 25 ஜூன், 2016

பீட்ரூட் மசாலா

தேவையான பொருட்கள்:
  • பீட்ரூட் – கால் கிலோ
  • சிறிய  வெங்காயம் – 10
  • பூண்டு (நசுக்கியது) – 3 பல்
  • தக்காளி – 1
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் –1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
  • எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • சோம்பு  – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு


செய்முறை:

  1. முதலில் பீட்ரூட்டை தோலுரித்து, நன்கு கழுவி, சதுர துண்டுகளாக நறுக்கவும். 
  2. கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 
  3. தக்காளி சேர்த்து குழைய வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். 
  4. பின் காயைச் சேர்த்து நன்றாக வதக்கி, கால் கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, மூடி போட்டு வேக விடவும். இடையிடயே கிளறி விட்டு, காய் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சோள அடை

தேவையான பொருட்கள்:

  • நாட்டு சோளம் – 1 கப்
  • உளுத்தம்பருப்பு  – கால் கப்
  • துவரம் பருப்பு – ½ கப்
  • கடலைப்பருப்பு – ½  கப்
  • காய்ந்த மிளகாய் – 10
  • சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – ½ கப்
  • இஞ்சி – 1” துண்டு
  • பெருங்காயம் – 1 டீஸ்பூன் 
  • மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) – 3 டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்    
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
  1. சோளம், உளுத்தம்பருப்பு சேர்த்துக்  கழுவி, களைந்து நான்கு மணி நேரம் தன்ணீரில் ஊற வைக்கவும். 
  2. அதே போல், மற்ற பருப்புகளையும் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். 
  3. பிறகு சோளம், உளுந்தை காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 
  4. ஊற வைத்த பருப்புகளை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 
  5. இரண்டு மாவுக்கலவையையும் ஒன்றாகச் சேர்த்து, மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, கெட்டியான இட்லி மாவுப் பதத்திற்கு கலக்கவும்.
  6. அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, இரு புறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். 

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மசாலா இட்லி

தேவையான பொருட்கள்:
  • இட்லி – 5
  • பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
  • தக்காளி (பொடியாக நறுக்கியது)   – 1
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
  • நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
  1. முதலில் இட்லியை சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். 
  2. ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். 
  3. பிறகு வெங்காயம் சேர்த்து, நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும். 
  4. தக்காளி சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். 
  5. பின் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து மசாலா திக்காகும் வரை கிளறவும். 
  6. இத்துடன் இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள சட்னி எதுவும் தேவையில்லை.

குறிப்பு: இட்லியில் உப்பு இருப்பதால் கவனமாக உப்பு சேர்க்க வேண்டும். 

சனி, 2 ஏப்ரல், 2016

ராகி ப்ளேக்ஸ் கீர் | ராகி அவல் பாயசம்

தேவையான பொருட்கள்:
  • ராகி ப்ளேக்ஸ் அரை கப்
  • பால் 2 கப்
  • நெய் 2 டீஸ்பூன்
  • துருவிய தேங்காய் 3 டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை ½ கப்
  • ஏலக்காய்2  
  • முந்திரி, பாதாம் – தேவையான அளவு

செய்முறை:
  1. முதலில் தேங்காய் துருவல், ஏலக்காய் ஆகியவற்றை கால் கப் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். 
  2. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, ராகி ப்ளேக்ஸ் சேர்த்து வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்
  3. இத்துடன் கொதிக்க வைத்த பால் சேர்த்து ராகி ப்ளேக்சை வேக விடவும். 
  4. ராகி ப்ளேக்ஸ்  வெந்தவுடன் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து வைத்த நட்ஸை கலந்து, அலங்கரித்து பரிமாறவும்.

புதன், 17 பிப்ரவரி, 2016

முளைக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள்:
  • முளைக்கீரை – 1 கட்டு
  • வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
  • தக்காளி (பொடியாக நறுக்கியது) – 1
  • பச்சை மிளகாய் (கீறியது) – 2  
  • பாசிப்பருப்பு – அரை கப்
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
அரைக்க:
  • தேங்காய் துருவல் – 2  டேபிள்ஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிக்க:
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1 
செய்முறை:
  1. கீரையை நன்றாக மண் போக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 
  2. பாசிபருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குழைவாக வேகவைக்கவும். 
  3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  4. பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  5. இத்துடன் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் வேக வைத்த பாசிபருப்பை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும். 
  6. கீரை முக்கால்வாசி வெந்ததும், அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.  

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ரவா லாடு

தேவையான பொருட்கள்:
  • ரவை – 1 கப்
  • சர்க்கரை – முக்கால் கப்
  • நெய் – அரை கப்
  • ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • பாதாம், முந்திரி (பொடித்தது) – தேவையான அளவு

செய்முறை:
  1. முதலில் ரவையை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். 
  2. சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 
  3. ஒரு அகலமான பேசினில் ரவை, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 
  4. கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யில் பொடித்த முந்திரி, பாதாமை வறுத்து எடுத்து மாவுடன் கலந்து வைக்கவும். 
  5. பிறகு அதே கடாயில் மீதமுள்ள  நெய்யை சூடாக்கி, அதனை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். 
  6. கை பொறுக்கும் சூட்டில், மாவை உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.