தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – கால் கிலோ
சிறிய வெங்காயம் – 10
பூண்டு (நசுக்கியது) –
3 பல்
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1
டீஸ்பூன்
மஞ்சள் தூள் –1/4
டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 1
டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை –
சிறிதளவு
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை
தோலுரித்து, நன்கு கழுவி ,
சதுர துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில்
எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ,
வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழைய வதக்கி ,
மிளகாய்த் தூள் , மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின் காயைச் சேர்த்து நன்றாக வதக்கி , கால்
கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ,
மூடி போட்டு வேக விடவும். இடையிடயே கிளறி விட்டு ,
காய் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
நாட்டு சோளம் – 1 கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
துவரம் பருப்பு – ½ கப்
கடலைப்பருப்பு – ½ கப்
காய்ந்த மிளகாய் – 10
சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – ½ கப்
இஞ்சி – 1” துண்டு
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
சோளம், உளுத்தம்பருப்பு சேர்த்துக் கழுவி, களைந்து நான்கு மணி நேரம் தன்ணீரில் ஊற
வைக்கவும்.
அதே போல், மற்ற பருப்புகளையும் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு சோளம்,
உளுந்தை காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான
தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
ஊற வைத்த பருப்புகளை கொரகொரப்பாக
அரைத்துக்கொள்ளவும்.
இரண்டு மாவுக்கலவையையும் ஒன்றாகச் சேர்த்து, மேலே கூறிய
அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, கெட்டியான இட்லி மாவுப் பதத்திற்கு கலக்கவும்.
அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, இரு புறமும் திருப்பிப்
போட்டு வேக வைத்து எடுக்கவும்.